நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

சேதுபாவாசத்திரம், பிப். 26: சேதுபாவாசத்திரம் அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து குருவிக்கரம்பை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைரவன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முத்துவேல் வரவேற்றார். பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு, சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிவேலு, ஊராட்சி தலைவர் வைரவன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் சின்னப்பா முன்னிலை வகித்தனர். கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் சிறப்புரையாற்றினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் (ஓய்வு) மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: