×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் 11 வது நாளாக நீடிப்பு

மன்னார்குடி. பிப்.26: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் 11 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்திம், தமிழக அரசு உடன டியாக சட்டசபையில் தீர்மானம் இயற்ற கோரியும் கூத்தாநல்லூர் காவல் நிலையம் அருகே அனைத்து ஜமாத்தார் சார்பில் கடந்த 15ம் தேதியில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் 11ம் நாளான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் பால்வள துறை அமைச்சரும், கீழ்வேளுர் தொகுதி திமுக எம்எல்ஏ மதிவாணன், ஏஐடியூசி நிர்வாகி சந்திர சேகர ஆசாத், மாணவர் பெருமன்றம் சுர்ஜித் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். 11 ம் நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு