×

கலெக்டர் அலுவலகத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர், பிப்.26: திருவாரூர் மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் காஸ்சிலிண்டர் மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதில் நுகர்வோருக்கு உள்ள குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (27ம் தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளதால் மாவட்டத்தில் உள்ள எரிவாயு வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து எரிவாயு விநியோகம் சீராக நடைபெற தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Caucus Consumer ,grievance meeting ,office ,Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...