×

மனநல மன அழுத்தம் குறித்த கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் மாதிரி கல்லூரியில் சமூகப் பணித்தறை, மாவட்ட சமூகநலத்துறை, நம்பிக்கை தொண்டு நிறுவனம் சார்பில் மனநலம், மன அழுத்தம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன், சட்ட ஆலோசகர் வக்கீல் அரசுதாயுமானவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யசோதா வரவேற்றார். மாவட்ட மனநல ஆலோசகர் டாக்டர் சத்தியபிரகாஷ், மனநல புள்ளிவிவர ஆய்வாளர் கோடீஸ்வரன், கேரளா மாநிலம் நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சணல் ரோபர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மனநலம் எப்படி இருக்க வேண்டும், மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது, அதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர்.

இதில் மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா, மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதிநிதி சுமிதா, சமூக பணித்துறை பேராசிரியர்கள், பிரீத்தி, ராஜகுமாரி, கோகிலா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவிகள் மாலினி, நிசா தொகுத்து வழங்கினார். முடிவில் சிந்து நன்றி கூறினார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து