தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 26: திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதிக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 60 வயது முடிந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்கள் வயிற்றில் அடிக்கும் ஓலா, உபர் அனுமதியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் பிரபு மற்றும் 6 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: