×

அக்கா திட்டியதால் வாலிபர் தற்கொலை

திருச்சி, பிப். 26: திருச்சி செம்பட்டு அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு(37). திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது அக்கா அங்குபொண்ணுவின் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குழந்தையை தூக்கி போட்டு விளையாடும்போது திடீரென தவறி கீழே விழுந்தது. இதை பார்த்த அங்குபொண்ணு, வேலைக்கு செல்லாமல், போதையில் வந்து சிறுவர்களை போல் விளையாடிக்கொண்டிருக்கிறாயா என வல்லரசுவை திட்டியுள்ளார். இதில் விரக்தியடைந்த வல்லரசு வீட்டுக்குள் சென்று தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அங்குப்பொண்ணு அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags : teenager ,suicide ,sister ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை