மணப்பாறை அருகே பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

மணப்பாறை, பிப்.26: மணப்பாறை அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பாறை அருகே கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ராஜலெட்சுமி(46). சுப்பிரமணியம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் ராஜலெட்சுமி தனியாக வசித்து வந்தார். ராஜலெட்சுமியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி போடுவார்பட்டியை சேர்ந்த லோகு என்பவர் ஆட்களுடன் வந்து ராஜலெட்சுமியை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்து மயங்கிய ராஜலெட்சுமியை மீட்டு அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலெட்சுமியிடம் வாக்குமூலம் பெற்று, லோகு உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: