×

ராஜபாளையம் அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

ராஜபாளையம், பிப். 26:  ராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ராஜபாளையம் அருகே புதுசெந்நெல்குளம் கிராமத்தில் 7 நாட்கள் நடைபெற்றது.  முகாமை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீனிவாசன் தொடக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருப்பதி வெங்கடேஸ்வரன் முகாம் விளக்க உரையாற்றினார். புதுசெந்நெல்குளம் ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் ராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில் பள்ளி மைதானம் சீர்செய்தல், பள்ளியில் இடைநின்ற மாணவர்களை படிப்பை தொடர ஊக்குவித்தல், கோவில் உழவாரப்பணி, மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சுத்திறன் பயிற்சி, யோகா பயிற்சி, வயரிங், வெல்டிங் பயிற்சி போன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. முகாம் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீனிவாசன் பள்ளி தலைமையாசிரியர் சரளா மற்றும் புதுசெந்நெல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கௌமாரி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் மாணவ, மாணவிகள் இந்த சிறப்பு முகாமை பற்றி கருத்துக்களை வழங்கினார்கள். விழா முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார்.

Tags : National Welfare Camp ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...