ராஜபாளையம், பிப்.26: ராஜபாளையம் ஏ.கே.டி தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி ஷ்யாம்ராஜா வரவேற்புரையாற்றினார். தலைமையாசிரியைகள் புவனா, ரமணி ஆண்டறிக்கை வாசித்தனர். ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், சாகசங்கள் நடைபெற்றன. பள்ளிக்குழு தலைவர் சந்திரசேகர் ராஜா, நகர் பிரமுகர்கள், ஏ.கே.டி.ஆர் கல்வி அறக்கட்டளை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவிகள் கலந்து கொண்டனர்.மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.