×

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

விருதுநகர், பிப்.26:விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. 6 முதல் 8, 9 முதல் பிளஸ்2 வரை இரு பிரிவுகளாக பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குருசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா நடத்தினர். போட்டிகளில் 50 பள்ளிகளில் இருந்து 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Tags : Environmental Awareness Competition ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி