×

நெறிப்பயிற்சி முகாம்

போடி, பிப்.26: போடியில் உள்ள சிசம் பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் செல்லமுத்து தொண்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை வாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு தேர்வு நேர நெறி பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆராய்ச்சி நிபுணர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிசம் பள்ளி குழும முதல்வர் வேதா வரவேற்றார். முகாமில், ‘8ம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை போக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரை வாய்ஸ் அறக்கட்டளை இயக்குனர் முருகேசன், லயன்ஸ் சங்க தலைவர் கலைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Mindfulness Camp ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?