×

குடும்ப பிரச்னையால் வாலிபர் தற்கொலை

ராஜபாளையம், பிப். 26: ராஜபாளையம் செல்லம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (37). இவர் ரயில்வே பீடர் ரோட்டில் ஆடியோ கடை நடத்தி வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இரவு கடையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் தெற்கு போலீசார் இறந்த ராஜேஷ்குமார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை