×

நடத்தையில் சந்தேகம் மனைவியை குத்திக்கொன்ற கணவர் மதுரை அருகே பயங்கரம்

மதுரை, பிப். 26: நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கத்தியால் சரமாரி குத்திக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.மனைவியின் நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலையில் கணவன்,மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன், மனைவியை கத்தியால் சரமாரி குத்தினார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய உமாமகேஸ்வரியை அக்கம், பக்கத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உமா மகேஸ்வரி இறந்தார்.இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மதுரை அருகே நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...