திருமங்கலம், பிப்.26: வீட்டிற்கு தெரியாமல் பேஸ்புக் மூலமாக பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமங்கலம் அருகேயுள்ள என்.அய்யம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் சுபாஷ்(21) என்ற மகன் உள்ளனர். வாலிபர் சுபாஷ் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடிவந்தார். இந்நிலையில் சுபாஷிற்கு பேஸ்புக் மூலமாக வத்தலக்குண்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்ட காதலாக மாறியுள்ளது. வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என எண்ணிய சுபாஷ் வீட்டிற்கு தெரியாமல் தனது பேஸ்புக் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.