×

பேஸ்புக் காதலியை திருமணம் செய்த வாலிபர் மாயம்

திருமங்கலம், பிப்.26: வீட்டிற்கு தெரியாமல் பேஸ்புக் மூலமாக பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமங்கலம் அருகேயுள்ள என்.அய்யம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் சுபாஷ்(21) என்ற மகன் உள்ளனர். வாலிபர் சுபாஷ் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடிவந்தார். இந்நிலையில் சுபாஷிற்கு பேஸ்புக் மூலமாக வத்தலக்குண்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்ட காதலாக மாறியுள்ளது. வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என எண்ணிய சுபாஷ் வீட்டிற்கு தெரியாமல் தனது பேஸ்புக் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின்புதான் தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் சுபாசிற்கு தெரியவந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் மனைவியை பிரித்து தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் சுபாஷ் குறித்து எந்த தகவல்களும் கிடைக்காததால் அவரது தந்தை பாண்டி சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : plaintiff ,lover ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!