×

வரி ெசலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருமங்கலம், பிப்.26: சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கும்படி திருமங்கலம் நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொ) சுருளிநாதன் கூறியதாவது, திருமங்கலம் நகராட்சிக்கு உபட்ட 27 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, தொழில்வரி, காலியிடமனை வரி, குடிநீர் கட்டணங்கள் உள்ளிட்டவைகளை உடனடியாக செலுத்தவேண்டும். இன்றைய நிலவரப்படி நகராட்சிக்கு வரிபாக்கியாக நடப்பாண்டு நீங்கலாக ரூ.48 லட்சம் நிலுவையில் உள்ளது. எனவே விரைவில் நகராட்சிக்கு வரிகளை செலுத்தி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...