விஏஓவை மாற்ற கோரிக்கை

மேலூர், பிப்.26: சான்றிதழுக்கு லஞ்சம் கேட்பதாக கூறி விஏஓவை மாற்ற வேண்டும் என கிராமமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.மேலூர் அருகே சருகுவலையபட்டியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியின் விஏஓ.வாக சின்னராஜா பணியாற்றி வருகிறார். இவர் தனது பணிகளை சரிவர செய்வதில்லை. எந்த பணிக்கும் பணம் கேட்கிறார் என்று சருகுவலையபட்டி ஊராட்சி தலைவி அருந்தேவி, உப தலைவர் பெரியசாமி மற்றும் கிராமமக்கள் கையெழுத்திட்டு தாசில்தார் சிவகாமிநாதனிடம் புகார் மனுவை நேற்று அளித்தனர்.

Related Stories: