×

விமான நிலையத்தில் செயல்படாத இயந்திரம்

அவனியாபுரம், பிப்.26: மதுரை விமான நிலையத்தில் பயண முனைவோர் மேலாளர் அலுவலகத்திற்கு அருகில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யும் இயந்திரம் மின்சார இணைப்பின்றி பயன்படுத்த படாமல் உள்ளது. குடிநீர் பாட்டில் ம்ற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய வரும் பயணிகள் இயந்திரம் செயல்படாததை கண்டு ஏமாற்றமடைகின்றனர். மேலும் அந்த இயந்திரத்தின் அருகிலேயே பிளாஸ்டிக் பையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து வைத்துள்ளனர். இது பார்ப்பதற்கு குப்பைகளை சேகரித்து வைக்கும் இடம் போல காட்சியளிக்கிறது.

Tags : airport ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...