கருப்புச்சாமி கோவிலில் மாசித் திருவிழா

சோழவந்தான், பிப்.26: சோழவந்தான் அருகே முதலைக்குளம் கம்ப காமாட்சி அம்மன், கருப்புச்சாமி கோவில் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 21ம் தேதி சிவராத்திரி அன்று இரவு பூசாரிபட்டியிலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பெட்டி எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: