வத்தலக்குண்டுவில் திமுக பொது தேர்தல்

வத்தலக்குண்டு, பிப். 26: வத்தலக்குண்டுவில் திமுகவின் 15வது பொது தேர்தலையொட்டி கட்சியினர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகி்க்க, நகர செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தார். கோம்பைபட்டி, விருவீடு, நடகோட்டை, விராலிமாயன்பட்டி உள்பட 7 ஊராட்சிகளில் உட்கிளை செயலாளர் பதவிக்கு திமுகவினர் பலர் விருப்ப மனு கொடுத்தனர். இதில் நிர்வாகிகள் அமுதவேல், அக்கீம், ஆரோக்கியசாமி, முருகேசன், பிரான்சிஸ், சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: