×

வாலிபர் தற்கொலை

சிதம்பரம், பிப். 26:   சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராஜா (24). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை ராஜாவிடம், ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் எனக் கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வருத்தமடைந்த ராஜா கடந்த 18ம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது தங்கை கனிமொழி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்துசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை