×

மின் விளக்குகள் எரியாததால் இருண்டு கிடக்கும் பிள்ளையார்குப்பம் பாலம்

உளுந்தூர்பேட்டை, பிப். 26:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பிள்ளையார்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மேம்பாலத்தின் வழியாக தினந்தோறும் உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட முக்கிய கிராமங்களுக்கு மட்டுமின்றி எல்லீஸ்சத்திரம் வழியாக விழுப்புரம் வரையில் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார் உள்ளிட்ட கரும்பு லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது. தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய பாலமாக இருக்கக்கூடிய பிள்ளையார்குப்பம் பாலத்தில் கடந்த சில வாரங்களாக உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இதர வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இரவு நேரத்தில் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்லும் விவசாயிகள், வாகனங்கள் ஏதாவது வந்து மோதிவிடுமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் தடையின்றி உயர் கோபுர மின்விளக்குகள் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : bridge ,Pillayakaruppam ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...