×

மயான கொள்ளையில் வாலிபரை செங்கற்களால் தாக்கி மிரட்டல்

புதுச்சேரி, பிப். 26: புதுவை முருங்கப்பாக்கம் சேத்திலால் நகரில் வசிப்பவர் வீரமணி மகன் ராமராஜ் என்ற காமராஜ் (28). தனியார் கடை ஊழியரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் ராஜேஷ் (28) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டு பிரச்னை காவல் நிலையம் வரை சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று இரவு அங்குள்ள கோயிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்த நிலையில் அங்கு தனது நண்பரான பொன்னன் என்ற சிலம்பரசனுடன், காமராஜ் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்குவந்த ராஜேஷ், பழைய பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக கேட்டு அவரை அசிங்கமாக திட்டியதோடு, அங்கிருந்த செங்கல்லால் இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இது குறித்து காமராஜ் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை எஸ்ஐ தமிழரசன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான பெயிண்டர் ராஜேசை தேடி வருகின்றனர்.


Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...