×

தடுக்க வந்தவரை கத்தியால் குத்தி விட்டு தப்பியவர்கள் லிப்ட் கொடுப்பது போல் வாலிபரிடம் செயின் பறித்த 2 பேர் கைது கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு

நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் வாலிபரிடம் செயின் பறித்து விட்டு தப்பிய  வழக்கில் கைதான 2 பேர் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.  நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் கடந்த 21ம் ேததி இரவு தனியாக நடந்து வந்த தெங்கம்புதூரை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற வாலிபரை பைக்கில் வந்த 2 பேர் லிப்ட் தருவதாக அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றேகால் பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். மேலும் இதனை தடுக்க வந்த நாகர்கோவில் செட்டிக்குளம், கணபதிநகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரையும் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது தெற்கு சூரங்குடி கீரிவிளை பகுதியை சேர்ந்த வினோத் (28), அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்  (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். ஜாலியாக செலவு  செய்ய பணம் தேவைப்பட்டதால் இதே போல் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர்கள் போலீசில் கூறி உள்ளனர். இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு உள்ளதாகவும் போலீசார் கூறினர். ேவறு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் இவர்களின் கூட்டாளிகள் சிலருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : plaintiff ,murder ,arrest ,
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !