எந்தவிதமான பிரச்னை ஏற்பட்டாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சட்டப்படி தீர்வு காணுங்கள்

பாபநாசம், பிப். 25: பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை செந்தாமரை வரவேற்றார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா பங்கேற்று பேசுகையில், பெண் குழந்தைகளாகிய உங்களுக்கு எந்தவிதமான பிரச்னை வந்தாலும் அதை துணிச்சலுடன், திறனுடன் எதிர்கொண்டு சட்டப்படி தீர்வு காண வேண்டும்.உங்களது முன்னேற்றத்துக்கு பல்வேறு தடைகள் வந்தாலும் அதை படிக்கட்டுகளாக அமைத்து கொண்டு உங்களது உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்றார்.பின்னர் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் அமைந்துள்ள லீகல் லிட்ரசி கிளப்பில் உள்ள பதிவேடு, புத்தகங்கள், கணினியை ஆய்வு செய்தார்.

Related Stories: