தஞ்சை, பிப். 25: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 12 பொறியியல் படிப்புகளுக்கு இங்கிலாந்தின் ஐஇடி எனும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ராவின் நிவாச ராமானுஜன் மையத்தில் நடத்தப்படும் படிப்புகளுக்கும் பொருந்தும். இங்கிலாந்தை சேர்ந்த ஐஇடி நிறுவனத்தின் அங்கீகாரம் என்பது உலக அளவில் தர நிர்ணயத்துக்கு பெயர் பெற்றதாகும் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தஞ்சை மற்றும் கும்பகோணம் வளாகங்களுக்காக 2015ம் ஆண்டு ஐஇடியின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்திருந்தது. இதைதொடர்ந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.