திருப்பழனத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்

திருவையாறு, பிப். 25: திருவையாறு வட்டம் திருப்பழனம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நாளை நடக்கிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி தலைமை வகிக்கிறார். முகாமில் திருப்பழனம், ராயம்பேட்டை, பெரமூர், செம்மங்குடி, ஒக்கக்குடி, காருகுடி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்து பயனடையலாம். இவ்வாறு திருவையாறு தாசில்தார் இளம்மாருதி தெரிவித்துள்ளார்.

Related Stories: