பட்டுக்கோட்டை, பிப். 25: பட்டுக்கோட்டை அடுத்த அலிவலம் எஸ்இடி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராசு தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் லட்சுமணன், தாளாளர் சித்ரா கோவிந்தராசு, அறங்காவலர் குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை முதுகலை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ராமலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியரும், திரைப்பட நடிகருமான ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் காமராஜ், ஆம்பல் சிவக்குமார், மூத்தாக்குறிச்சி பழனிவேல், மதுக்கூர் வடக்கு ஊராட்சி தலைவர் தண்டாயுதபாணி, அலிவலம் ஊராட்சி தலைவர் ஆசைத்தம்பி மற்றும் பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர்கள் தியாகராஜன், ஹரிகிருஷ்ணன் தொகுத்து வழங்கினர். முதுகலை ஆசிரியர் பாலதண்டாயுதம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.