×

குடந்தை ஏஆர்ஆர் கல்வி குழுமத்தில் தேர்வை கொண்டாடுவோம் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் ஏஆர்ஆர் கல்வி குழுமத்தில் பயிலும் 9, 10ம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேர்வை கொண்டாடுவோம் எனும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமலிங்கம் கலையரங்கில் நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது.ஏ,ஆர்ஆர் கல்வி குழும தாளாளர் டாக்டர் சுப்ரமணியம், செயலாளர் வைத்தியநாதன், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் சுகமாலா வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக யதார்த்த ஜோதிடர் ஷெல் வீதா மோதர் பங்கேற்று மாணவர்களுக்கு தேர்வை பற்றிய விளக்கங்களை அளித்தார்.

டாக்டர் அப்துல்கலாம் சீடரும் மாணவர் தளபதியுமான தாமு பங்கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு பற்றிய விழிப்புணர்ச்சி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பு, மாணவர்கள் எப்படி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று பலகுரலில் பேசினார்.இதைதொடர்ந்து பள்ளி சார்பில் சீனாவில் பரவியுள்ள கொரோனோ வைரசில் இருந்து விடுபட அந்நாட்டு மக்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. ஏஆர்ஆர் எஸ்எல் வித்யாஸ்ரம் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.




Tags : AKR Education Group ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு