மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

தஞ்சை, பிப். 25: தஞ்சை மானம்புச்சாவடி பங்களா தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மனைவி சொர்ணம் (75). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது பைக்கில ஹெல்மெட் அணிந்து 2 பேர் வந்தனர். பின்னர் திடீரென சொர்ணம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் சொர்ணம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: