அலுவலர்கள் மெத்தனம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை

பேராவூரணி, பிப். 25: பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் திவ்யா (28). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு ரெகுநாதபுரம் மாரியம்மன் கோயில் அருகே உள்ளது. இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கோயிலுக்கு சென்று விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 38 கிராம் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து பேராவூரணி போலீசில் திவ்யா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: