×

கட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, பிப்.25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பாலு தலைமையில் அனைத்து மாணவ, மாணவிகளும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை ஆசிரியர் உறுதி மொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர்.அப்போது தலைமையாசிரியர் பேசுகையில், பெண் குழந்தைகள் உள்ள வீடு ஓர் சிறு கோயில். பெண் குழந்தைகள் இருக்கும் வீடு அது பசுமை நிறைந்த நந்தவனம் என்றும் குறிப்பிட்டார்.

Tags : Katimadu Government School ,
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்