×

அனைத்து துறை அலுவர்கள் ஏற்பு கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம்

திருச்சி, பிப். 25: மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி துறையூரில் நடந்தது.முசிறி உதவி கலெக்டர் பத்மஜா தலைமை வகித்தார். இதில் கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கான உயர்கல்வி, சுயதொழில் வேலைவாய்ப்பு, மத்திய மற்றும் மாநில அரசு பணிவாய்ப்பு, அரசு சார்பு பணி வாய்ப்புகள், தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துணை இயக்குனர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags : Career Guidance Seminar ,College Students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...