திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழி

திருச்சி, பிப்.25: திருச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூரத்தக்க வகையில் பிறந்த நாளான 24ம் தேதியை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று கலெக்டர் சிவராசு தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அதனை அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வடிவேல்பிரபு, சாந்தி (வேளாண்மை) சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஷ்வாி, மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: