×

வேதாரண்யம் தேத்தாக்குடி வடக்கில் பல்வேறு கட்சியினர் 100 பேர் விலகல்: திமுகவில் ஐக்கியம்

வேதாரண்யம், பிப். 25: வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி கழக தலைவர் தசமணி தலைமை வகித்தார். பொன்னம்பலவாணன் வரவேற்றார். கட்சியில் இணைந்தவர்களுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக அவைத்தலைவர் கோவிந்தசாமி, வார்டு செயலாளர்கள் சாம்பசிவம், பாலசுப்பிரமணியன், ஆசிரியர் ஓய்வு ஒன்றிய அலுவலக பொறுப்பாளர் பூபாலன், தொழிற்சங்க பிரதிநிதி ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவை சேர்ந்த வீரதமிழ், ராஜேந்திரன், கணேசன், காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, அம்பிகாபதி, அம்மாசி, உத்தண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இளைஞரணி ராம்சுந்தர் நன்றி கூறினார்.

Tags : parties ,Vedaranyam Thettakudi North ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...