×

வேதாரண்யம் அருகே கள்ள சாராயம் விற்ற 2 பேர் கைது

வேதாரண்யம், பிப். 25: வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் கள்ள சாராயம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அவரிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரிக்காடு தோப்பு பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அவரிக்காட்டை சேர்ந்த வீரபத்திரன்(48), செந்தில்குமார்(41) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...