செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தூத்துக்குடியில் பாஜ மறியல் முயற்சி

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் தனியார் கட்டிடம் ஒன்றில் செல்போன் டவர் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இக்கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அதில் டவர் அமைப்பது மேலும் ஆபத்தாக முடியும் என்று கருதிய பாஜவினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென தாமோதரநகர் பகுதியில் திரண்டனர். மேலும் அவர்கள் அங்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ரோட்டின் குறுக்கே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அங்கு சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர். மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் தங்கம் முன்னிலை வகித்தனர். தகவலறிந்த தென்பாகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: