குறைகளை வரும் 2ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் நெல்லையில் மார்ச் 10ல் பிஎப் குறை தீர்க்கும் நாள்

நெல்லை, பிப். 25: நெல்லையில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 10ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து உதவி ஆணையர் கலைச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அதன் மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் (வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும்) கூட்டத்தை மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை நடத்துகிறார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் மண்டல ஆணையாளர் நிலை - 1, வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்ஜிஓ பி காலனி, நெல்லை - 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மனுவின் மேலே ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்’ மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மார்ச் 2ம் தேதிக்குள் பிஎப் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் கூட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், வருங்கால வைப்புநிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும் நடத்தப்படும். மனு அனுப்பியவர்கள் மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை குறிப்பிட்ட விவரப்படி மண்டல ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: