நாங்குநேரி. பிப். 25: அணுகுசாலையை கண்டுகொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறும் நின்றுசெல்லும் அரசு பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் முறையாக நிற்பதில்லை. எப்போதாவது நின்றாலும் அணுகுசாலையைத் தவிர்த்து முக்கிய சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனர். அப்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.