உடுமலை,பிப்.25:தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், ஜிவிஜி மகளிர் கல்லூரி அறிவியல் துறை மற்றும் கலிலியோ அறிவியல் சங்கம் சார்பில் ஒருநாள் அறிவியல் திருவிழா கல்லூரி அரங்கில் நடந்தது.
உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருமான மணி வரவேற்றார். ஜிவிஜி மகளிர் கல்லூரி கணித துறை தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டர் சங்க தலைவர் ரவிஆனந்த் முன்னிலை வகித்தார். செயலர் சத்யம் பாபு, நிர்வாகி நாகராஜ், ராயல்ஸ் அரிமா சங்கத்தின் ராஜசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடந்தன. போட்டிகளை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டஅலுவலர் சரவணன், கொடுவாயூர் ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மத்திய அறிவியல் தகவல் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலாளர் டி.ராமசாமியுடன் மாணவ, மாணவிகள் கலந்துரையாடினர்.