×

விலங்கூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் அவதி

பந்தலூர், பிப். 25: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட விலங்கூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக பஞ்சாயத்து கிணற்றில் மோட்டார் வைத்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். குடிநீர் கிணறு தூர்வாராமல் இருப்பதால் கிணற்று நீர் மாசு ஏற்பட்டு  கலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம் செய்வதால் சுகாதாரமான குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைகின்றனர்.  எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Vizhur ,region ,
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்