கோவை, பிப். 25: கோவை மாநகராட்சியை கண்டித்து வரும் மார்ச் 11மதேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், ‘’கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வரும் மார்ச் 11ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.