கோவை மாநகராட்சியை கண்டித்து மார்ச் 11ல் முற்றுகை போராட்டம்

கோவை, பிப். 25:  கோவை மாநகராட்சியை கண்டித்து வரும் மார்ச் 11மதேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.

கோவை  மாநகர் கிழக்கு  மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கிராஸ்கட் ரோட்டில்  உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தி.மு.க.  பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில், ‘’கோவை  மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வரும் மார்ச் 11ம் தேதி மாநகராட்சி  பிரதான அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’’ என்பது உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள்   அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,  நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, நந்தகுமார்,  மெட்டல் மணி, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, மு.மா.ச.முருகன்,  மகுடபதி, தீபா,  ராஜ ராஜேஸ்வரி பாபு, எஸ்.எம்.சாமி, கோவை லோகு, வடவள்ளி  சண்முகசுந்தரம், மனோகரன், சேதுராமன், வக்கீல் பி.ஆர்.அருள்மொழி,  குனியமுத்தூர்  லோகு, வி.பி.செல்வராஜ், நாகராஜ், மீனா ஜெயக்குமார்,  மு.இரா.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: