பெண்ணிடம் அத்துமீறி பேசியதால் வங்கி மேலாளர் மீது தாக்குதல் வைரலாகும் ஆடியோ, வீடியோ

கோவை, பிப்.25:  கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (37). இந்து பரிவார் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர். இவரது மனைவி கலா (33). இவர் மகளிர் சுய உதவி குழுவிற்கான கடன் தொடர்பான விவரங்கள் பெற அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.

அந்த வங்கியின் மேலாளர் இளங்கோவன் (58) என்பவரை அணுகி விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு பிறகு கலாவி–்ன் செல்போன் எண்ணை வாங்கிய இளங்கோவன் அடிக்கடி அழைத்து அத்துமீறி பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலா தனது கணவர் லோகநாதனிடம் கூறியுள்ளார். இதையடுத்து லோகநாதன் சிலருடன் சென்று வங்கியில் புகுந்து இளங்கோவனை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ பதிவு வைரலாகியது. கலாவிடம் இளங்கோவன் பேசிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தன்னை தாக்கியது தொடர்பாக இளங்கோவன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் கலாவின் புகாரின் பேரிலும் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: