ஈரோடு, பிப். 25: ஈரோடு காளைமாட்டு சிலை ஈஸ்வரன் வீதியை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அஜித்குமார் (21). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் தீயணைப்பு நிலையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அஜித்குமார் பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர், அஜித்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.200ஐ திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார். இதைப்பார்த்த அஜித்குமார் திருடன்...திருடன்... என கூச்சலிட்டவாறே மர்ம நபரை விரட்டினார்.