×

மக்கள் வலியுறுத்தல் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்திக்கொண்டும், பறவை காவடி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பக்தர்கள் கூடை, கூடையாக பூக்களை கொண்டு வந்தனர். சில பக்தர்கள் சேர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மன் பாதத்தில் கொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மன் முன்பு பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் மலைபோல் குவிந்து கிடந்தது. இதையடுத்து நேற்று பூ பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags : flowering ceremony ,Muthumariamman ,
× RELATED நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: 8ம்தேதி உள்ளூர் விடுமுறை