×

தாந்தோணிமலை சாலையில் இடைவெளி விட்டு தடுப்புசுவர் அமைக்க வேண்டும்

கரூர், பிப். 25: தாந்தோணிமலை பிரதான சாலையோரம் தடுப்புச் சுவர் அமைக்கும் போது தேவையான பகுதிகளில் இடவசதி ஏற்படுத்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து தாந்தோணிமலை சுங்ககேட் வரை சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து தடுப்புச் சுவர்களும் அகற்றப்பட்டு, மையப்பகுதியில் உயர்கோபுர மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் சமயத்தில், தாந்தோணிமலை பிரதான கடைவீதிப்பகுதியில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவரை அகற்றி, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் எளிதாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போதைய நிலையில், மில்கேட் பகுதியில் இருந்து சுங்ககேட் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளோடு, சுங்ககேட் வரையிலும் மின்கம்பங்கள் அமைத்து தடுப்புச் சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,Thanthonimalai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...