×

குடிநீர் குழாயை சீரமைக்க சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து இடையூறு

கரூர், பிப். 25: கரூர் தாந்தோணிமலை பிரதான சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நடப்பட்டுள்ள சிவப்பு கொடியுடன் கூடிய கம்பினை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பிரதான சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. பணிகள் சரிவர முடியாத நிலையில், பள்ளத்தை மூடி, சிவப்பு கொடி நடப்பட்டுள்ளது. இதனால் தாந்தோணிமலை பகுதியில் இருந்து கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் இதனால் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, குடிநீர் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து எளிதான முறையில் போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...