திருப்பரங்குன்றம், பிப்.25: மூலக்கரை அருகே அணைக்க ஆளில்லாமல் ஹைமாஸ் விளக்கு பகல் முழுதும் எரிந்து கொண்டிருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே திருப்பரங்குன்றம் - திருமங்கலம் சாலை சந்திப்பு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு கடந்த சில நாட்களாக தினமும் பகலில் எரிந்து கொண்டிருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.