×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க ேமாதிரம் சாத்தூர் எம்எல்ஏ வழங்கினார்

சாத்தூர்,பிப்.25:  சாத்தூரில் ஜெயலலிதா 72வது பிறந்த நாள் விழாவையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. சாத்தூர் முக்குராந்தலில் வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72வது பிறந்த நாளை முன்னிட்டு  அவரது திருவுரு படத்திற்கு மாநில பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம் தலைமையில், நகர செயலாளர் வாசன் முன்னிலையில். சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்தூரில் உள்ள 24 வார்டுகளும் ஜெயலலிதா உருவபடம் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.  அண்ணாநகரில் சாத்தூர் அதிமுக நகர் கழகம் மற்றும் திருமங்கலம் எஸ்கேஜி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட மன்ற இணை செயலாளர் இளங்கோவன் செய்திருந்தார். நேற்று அரக மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு  மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் சார்பில் சாத்தூர் எம்எல்ஏ, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார்.

Tags : Jayalalithaa Birthday Celebration Govt ,
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...