×

திருவில்லிபுத்தூர் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் பலி

திருவில்லிபுத்தூர், பிப்.25: திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் பிரேதம் கிடப்பதாக நகர் காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகர் காவல்துறை சார்பில் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு கொடுத்தனர்.இதன் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் மூழ்கி இறந்த ஆண் உடலை மீட்டனர். காவல்துறை விசாரணையில், இறந்தவர் திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம்(50) எனத் தெரிய வந்தது. இவர் நீச்சல் தெரியாமல் குளத்தில் வழுக்கி விழுந்து இறந்து இருப்பது விசாரணையில்  தெரியவந்துள்ளது. இறந்த சிவப்பிரகாசரின் உடலை   கைப்பற்றி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : Srivilliputhur Temple Theppukulam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...